உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பவானிசாகர் அணைக்கு 2 ஆயிரம் கனஅடி நீர்வரத்து

Published On 2022-04-26 14:52 IST   |   Update On 2022-04-26 14:52:00 IST
நீலகிரி மலைப்பகுதியில் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஈரோடு:

நீலகிரி மலைப்பகுதியில் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 

கடந்த சில நாட்களாகவே நீர்பிடிப்பு பகுதியில் மழைப்-பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்-துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்-றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 

இந்நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் இன்று பவானிசாகர் அணைக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80.79 அடியாக உள்ளது. குடிநீருக்-காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கீழ்-பவானி பாசனத்திற்காக 1, 800 கன அடியும் என மொத்தம் 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்-றப்பட்டு வருகிறது.

Similar News