உள்ளூர் செய்திகள்
கும்பாபிஷேகம் நடந்த போது எடுத்தப்படம்

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிசேகம்

Published On 2022-04-26 14:48 IST   |   Update On 2022-04-26 14:48:00 IST
கொடுமுடி அருகே செல்வ விநாயகர் கோவில் கும்பாபிசேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடுமுடி:

கொடுமுடி அருகே செல்வ விநாயகர் கோவில் கும்பாபிசேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


கொடுமுடி அருகே சத்திரப்-பட்டியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பாப்பாத்-தாள், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி கோவில் கும்பா பிசேக விழா (நடைபெற்றது. கும்பாபிசேக விழா கடந்த 24-ந் தேதி காலை விக்னேஸ் வர பூஜை, ஸ்ரீ கணபதி, மகாலட்சுமி, ஸ்ரீநவக்கிரக யாகம், தீபாராதனையுடன் தொடங்கியது. 

பின்னர் பக்தர்கள் காவேரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் கொண்டு வந்தனர். தொடர்ந்து விமான கலசம், சுவாமியந்திர, அஷ்டபந்தன பிரதிஷ்டை நடைபெற்றது. மாலை வாஸ்துசாந்தி, முளைப்பாலிகை அழைத் தல் நிகழ்ச்சியும், முதல் கால யாக வேள்வி தொடங்கி நடைபெற்றது.

நேற்று காலை 2-ம் கால யாகமும், நாடி சந்தனம், பூர்ணா ஹீதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தெடர்ந்த மகா கும்பாபி சேகம் தச தரிசனம், தீபாராத னையும், பிரசாதம் வழங்கல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

ஏராளமான பக்தர்கள் கும்பாபிசேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை முதல் மதியம் வரை அன்னதானம் நடைபெற்றது.

Similar News