உள்ளூர் செய்திகள்
கைதான சின்னசாமி.

டி.என்.பாளையம் அருகே உரக்கடையில் ரூ.25 ஆயிரம் திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Published On 2022-04-25 15:50 IST   |   Update On 2022-04-25 15:50:00 IST
டி.என்.பாளையம் அருகேயுள்ள கே.என்.பாளையம் செல்லி-பாளை--யத்தை சேர்ந்தவர் குமாரசாமி (51), இவர் அதே பகு-தியில் உரக்-கடை நடத்தி வரு-கிறார்.
டி.என்.பாளையம்: 

டி.என்.பாளையம் அருகே உரக்கடையில் ரூ.25 ஆயிரம் திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

டி.என்.பாளையம் அருகேயுள்ள கே.என்.பாளையம் செல்லி-பாளை--யத்தை சேர்ந்தவர் குமாரசாமி (51), இவர் அதே பகு-தியில் உரக்-கடை நடத்தி வரு-கிறார்.

இங்கு கணக்காளராக அதே பகுதியை சேர்ந்த கவிதா என்பவர் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கவிதா வரவு, செலவு கணக்கை பார்த்துவிட்டு, ரூ.25 ஆயிரத்தை கடையில் இருந்த பெட்டியில் வைத்து பூட்டி விட்டு சாப்பிடுவதற்காக சென்றார்.

பின்னர் வந்து பார்த்த போது பெட்டியில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி-யான குமாரசாமி, கடையில் வேலை செய்து வரும் கே.என்.பாளையம் பகுதியை சேர்-ந்த சின்னுச்-சாமி (30) என்-பவர் மீது கடையில் இருந்த ரூ.25 ஆயிரத்தை திருடியதாக பங்களாப்-புதூர் போலீசில்  புகார் கொடுத்-தார்.

புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசார-ணையில் கூலித்தொழிலாளி சின்னசாமி திருடிய பணத்தில் 2 ஆயிரத்தை செலவு செய்து விட்டதாக, ஒப்புக்கொண்டார். இதனை-யடுத்து போலீசார் சின்ன-சாமியை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.23 ஆயிரத்தை மீட்டு குமாரசாமியிடம் ஒப்படைத்தனர்.

Similar News