உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2022-04-25 09:44 GMT   |   Update On 2022-04-25 09:44 GMT
பவானிசாகரில் சாக்கடை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம்:

பவானிசாகரில் சாக்கடை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பவானிசாகர் அடுத்துள்ள நால்ரோடு பகுதியில் கடந்த சில நாட்களாக நெடுஞ்சாலை துறை சார்பில் சாக்கடை அமைக்க குழி தோண்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை திடீரென சாலை மறியல் செய்தனர்.

 இந்த போராட்டம்  காரணமாக ரோட்டின் இரு-புறமும் ஏராளமான வாகனங்-கள் அணிவகுத்து நின்றன. இதுப்பற்றி தெரியவந்ததும் பவானி சாகர் போலீசார் விரைந்து வந்து மறியல் செய்த பொது-மக்களிடம் பேச்சு-வார்த்தை நடத்தினர்.

 அப்போது விரைவில் குழி தோண்டும் பணியை முடிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து சுமார் 45 நிமிடத்துக்கு பின்னர் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து அனைத்து வாகனங்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

Tags:    

Similar News