உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கொரோனாவுக்கு 3 பேர் சிகிச்சை

Published On 2022-04-24 14:58 IST   |   Update On 2022-04-24 14:58:00 IST
ஈரோடு மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இதனால் கொரோனாவுக்கு 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் கொரோனாவுக்கு 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் மார்ச் மாதம் முதல் குறைய தொடங்கி ஒற்றை இலக்கில் பதிவாகி வந்தது. இந்நிலையில் கடந்த 2-ந் தேதி கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பினார். 

இதனால் சுமார் 2 வருடங்களுக்கு பிறகு கொரோனா இல்லாத மாவட்டமானது ஈரோடு.
இந்நிலையில் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பிறகு கடந்த 17-ந் தேதி ஈரோட்டில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

அதைத் தொடர்ந்து 3 நாட்களாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. கடந்த 20&ந் தேதி மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மறுநாள் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 670 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1லட்சத்து 31 ஆயிரத்து 933 பேர் குணமடைந்துள்ளனர்.  இதுவரை சிகிச்சை பலனின்றி 734 பேர் இறந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் மாவட்டத்தில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Similar News