உள்ளூர் செய்திகள்
பவானி அருகே மின்கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
பவானி:
பவானி அருகே மின்கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
பவானி அடுத்த குப்பிச்சி பாளையம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (48). இவர் அந்த பகுதியில் ஓலை வீடு அமைத்து அதற்குமேல் தகர சீட்டுகள் போட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற் பட்டது. தொடர்ந்து வீடு தீப்பற்றி எரிய தொடங்கியது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நிலைய அலுவலர் ஜான்சன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் துணி உள்பட பல்வேறு பொருட் கள் எரிந்து சாம்பலானது. இதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.