உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-04-24 08:51 GMT   |   Update On 2022-04-24 08:51 GMT
முத்தியால்பேட்டையில் தச்சு தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

முத்தியால்பேட்டை சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். தச்சு தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் பெருமாள் ராஜ் என்ற மகனும் உள்ள-னர். 

கருத்து வேறுபாடு காரணமாக ஆனந்த-கிருஷ்ணனை விட்டு பிரிந்து அவரது மனைவி, தனது மகன் பெருமாள் ராஜுடன் சாரம் சக்தி நகரில் வசித்து வருகிறார். 

கடந்த சில நாட்களாக ஆனந்தகிருஷ்ணன் உடல்-நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். அவரை அவ்வப்-போது அவரது மகன் பெருமாள் ராஜ் பார்த்து நலம் விசாரித்து விட்டு செல்வார். 

இந்த நிலையில்  ஆனந்த-கிருஷ்ணனுக்கு மேலும் உடல்நிலை பாதிக்கப்படவே அவரை  அவரது மகன் பெருமாள் ராஜ் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். 

இந்த நிலையில்  பெருமாள்ராஜ் தனது தந்தையை பார்க்க முத்தியால் பேட்டையில் உள்ள வீட்டுக்கு வந்தார். 

அப்போது அனந்த-கிருஷ்ணன் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு பெருமாள்ராஜ் அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர்  உதவியுடன் அனந்தகிருஷ்ணனை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்-திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்-டர்கள் ஏற்கனவே அனந்தகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து பெருமாள்-ராஜ்-முத்தியால் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

நெல்லித்தோப்பு மார்க்-கெட் வீதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ராதா (70). இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை. 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கர் இறந்து விட்டதால் ராதா தனது அண்ணன் மகள் மாலதி பராமரிப்பில் இருந்து வந்தார். அவருக்கு அவ்வப்-போது மாலதி உணவு மற்றும் மருத்துவ உதவி செய்து வந்தார். 

இந்த நிலையில் மாலதி தனது அத்தை ராதாவை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் ராதா இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

வயது முதிர்ச்சியினாலோ அல்லது நோய் பாதிப்பாலோ ராதா இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

இதுகுறித்து மாலதி உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார்.  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News