உள்ளூர் செய்திகள்
மத்திய மந்திரி அமித்ஷா அரவிந்தர் ஆசிரமத்தில் அரவிந்தர், அன்னை சமாதியில் மலர்கள் தூவி வணங்கினார்.

அரவிந்தர் ஆசிரமத்தில் பக்தர்கள் கூட்டு தியானம்

Published On 2022-04-24 14:18 IST   |   Update On 2022-04-24 14:18:00 IST
அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை தங்கிய தினம் - பக்தர்கள் கூட்டு தியானம் நடைபெற்றது.
புதுச்சேரி:

அரவிந்தர் ஆசிரம அன்னை, 1941-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி முதன்முறையாக புதுவை வந்தார். 

சில காலம் இங்கு தங்கியிருந்த அன்னை பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர், 1920-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி மீண்டும் புதுவைக்கு வந்த அன்னை, ஆசிரமத்திலேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். 

அந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் ஆசிரம பொறுப்புகளை அன்னையிடம், அரவிந்தர் ஒப்படைத்தார். 

அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை நிரந்தரமாக தங்கிய தினம், ஆசிரமத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப் பட்டு வருகிறது.

அதன்படி ஆசிரமத்தில் அன்னை நிரந்தரமாக தங்கிய தினத்தை முன்னிட்டு, அரவிந்தர், அன்னை தங்கியிருந்த அறைகளை திறந்து, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பார்வையிட திறந்து வைக்கப்பட்டது.

 இதில் உள்ளுர் மற்றும் வெளியூரை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஆசிரமத்தில் கூட்டு தியானம் நடைபெற்றது.

Similar News