உள்ளூர் செய்திகள்
பண்ணாரியம்மன் கோவிலில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச பிரசாதம்

Published On 2022-04-23 15:07 IST   |   Update On 2022-04-23 15:07:00 IST
இன்று முதல் பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் பணி தொடங்கியது.
சத்தியமங்கலம்:

இன்று முதல் பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் பணி தொடங்கியது.


சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு  சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வரு கிறார்கள்.

அதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மேலும்  கர்நாடகா மாநில பக்தர்கள் என  தினமும் ஆயிரக்கணக்கான பேர் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ கத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன், பழனி முருகன் கோவில் மற்றும் பண்ணாரி யம்மன் கோவில் உள்பட 10 கோவில்களில் இலவச பிரசாதம் வழங்கும்  திட்டம்  இன்று தொடங்கி வைக்கப் பட்டது. இந்த திட்டத்தை சென்னையில் அமைச்சசர் சேகர் பாபு இன்று தொடங்கி வைத் தார்.

இதையொட்டி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலிலும் இன்று காலை இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப் பட்டது. 
இன்று கோவிலுக்கு ஏராள மான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு பொங்கல், புளியோதரை சாதம், லட்டு மற்றும் பஞ்சாமிர்தம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது. இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் வரிசையில் நின்று இலவச பிரசாதத்தை வாங்கி சென்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் இலவச பிரசாதம் வழங்கப் படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News