உள்ளூர் செய்திகள்
புதுச்சேரி தவளக்குப்பம் அண்ணா நகரில் சொர்ணாகர்ஷண பைரவர்அஷ்ட பைரவர்கள் கோவில்களில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
புதுச்சேரி, 23:
புதுச்சேரி தவளக்குப்பம் அண்ணா நகரில் சொர்ணாகர்ஷண பைரவர் மற்றும் அஷ்ட பைரவர்கள் கோவில் உள்ளது, இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமி திருவிழா கடந்த 19ந் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 6 மணியளவில் முதல்கால பூஜைகள் தொடங்கியது,
20ந் தேதி காலை 6 மணியளவில் 2ம் கால பூஜையும், உற்சவ மூர்த்தி களுக்கு விசேச அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. தொடர்ந்து 21ந் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மகா தீபாரா தனையுடன் லட்ச்சார்ச்சனை நடை பெற்றது. முக்கிய நாளான நேற்று காலை சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. ஊரணி பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து இரவு 108 திருவிளக்கு வழிபாடு பூஜை நடை பெற்றது. இதில் திரளான பெண்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா மற்றும் பூஜை ஏற்பாட்டினை விழாக்குழு தலைவர் ராயல் மற்றும் அண்ணா நகர் கிராம வாசிகள் செய்திருந்தனர்.