உள்ளூர் செய்திகள்
கைது

அபிஷேகபாக்கம் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

Published On 2022-04-23 09:18 GMT   |   Update On 2022-04-23 09:18 GMT
அபிஷேகபாக்கம் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.
பாகூர்:

தவளக்குப்பம் அடுத்த அபிஷேகபாக்கம் தமிழக பகுதியை சேர்ந்த கிளிஞ்சிகுப்பம் கிராமத்துக் இடையே மலட்டாற்றின் ஓடை இருந்து வருகிறது. இந்த ஓடையில் சில சமூக விரோதிகள் மணலை கட்டுமானப் பணிக்கு திருட்டுத்தனமாக மணல் வாரி விற்பனை செய்து வருகின்றனர். அது சம்மந்தமாக அவ்வப்போது அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்து கண்டுகொள்ளாமல் இருந்துந்தனர்.

வந்த நிலையில் நேற்று இரவு மணல் திருட்டு நடப்பதாக அப்பகுதி மக்கள் மீண்டும் தவளகுப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு ஒரு மினி லாரியை வைத்து மணல் ஏற்றிவருவதை கண்டுபிடித்தனர். மணல் திருட்டில் ஈடுபட்ட சிங்கிரிகுடி பகுதியை சேர்ந்த ரஜினி வயது 30, வில்லியனூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த சாரதி வயது 19, ரூபன் வயது 21, ராஜ்குமார் வயது 28, ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் திருட்டில் பயன்படுத்திய மினி லாரி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Tags:    

Similar News