உள்ளூர் செய்திகள்
85 வார்டுகளுக்கு நிர்வாகிகள் மனு தாக்கல்
85 வார்டுகளுக்கு நிர்வாகிகள் மனு தாக்கல் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க.வுக்குட்பட்ட வார்டு, தொகுதி, நகரம், மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடந்தது.
மேற்கு மாநில தேர்தல் பொறுப்பாளர்கள் அருண்மொழிதேவன், முருகுமணி ஆகியோர் தலைமை வகித்தனர்.
மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் முன்னிலை வகித்தார். முதல் நாளான இன்று வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு வார்டு தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை தேர்தல் பொறுப்பாளர்களிடம் தாக்கல் செய்தனர். மேற்கு மாநிலத்துக்குட்பட்ட 85 வார்டுகளுக்கு மனு தாக்கல் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் அவைத் தலைவர் பேராசிரியர் ராமதாஸ், துணை தலைவர் ஆனந்தன், இணை செயலாளர்கள் காசிநாதன், மகாதேவி, துணை செயலாளர்கள் கோவிந்தம் மாள், நாகமணி, சதாசிவம், கணேசன், பொருளாளர் சங்கர், இளைஞரணி செயலாளர் விக்னேஷ், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் செல்வராஜ், மாணவரணி செயலாளர் புகழ், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் முருகன், தொகுதி செயலாளர்கள் பொன்னுசாமி, வெங்கடேசன், மணி, தர்மலி ங்கம், கமல்தாஸ்,சேகர், தீன தயாளன், வேலவன், ஆனந்தன், இருசப்பன், கோபால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.