உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பிளஸ்-2 பொதுத்தேர்வினை 24,909 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

Published On 2022-04-22 15:09 IST   |   Update On 2022-04-22 15:09:00 IST
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை 24,909 மாணவ&மாணவிகள் எழுதுகின்றனர் என கலெக்டர் தெரிவித்துள்ளார்-.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை
24,909 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர் என கலெக்டர் தெரிவித்துள்ளார்-.

தமிழகத்தில் வரும் மே மாதம் 5-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
 பிளஸ்-1 பொதுத் தேர்வினை 27,656 மாணவ-மாணவிகளும், பிளஸ்-2 பொதுத்தேர்வினை 24,909 மாணவ-மாணவிகளும் எழுத உள்ளனர். பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுக்காக 104 தேர்வு மையங்களும் மற்றும் தனி தேர்வர்களுக்கு 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வினை அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நல்ல முறையில் நடத்திட வேண்டும். தேர்வு பணியில் துறை அலுவலர், அறைக் கண்காணிப்பாளர், பறக்கும் படையினர், ஆய்வு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் போதுமான அளவு நியமனம் செய்ய வேண்டும்.

தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர்வசதி, கழிப்பிட வசதி, போக்கு வரத்து மற்றும் பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார்.

Similar News