உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

வாகனம் மோதி ஓய்வு பெற்ற மின்சார ஊழியர் பலி

Published On 2022-04-22 15:05 IST   |   Update On 2022-04-22 15:05:00 IST
வாகனம் மோதி ஓய்வு பெற்ற மின்சார ஊழியர் பலியானார்.
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பாரதிதாசன் சாலையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 65). ஓய்வு பெற்ற மின்சார வாரிய ஊழியர். இவரது மனைவி செல்வராணி (வயது 55). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

வடவாளம் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பாலகிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

செல்வராணி சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சம்பட்டிவிடுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News