உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டார்.

Published On 2022-04-21 15:14 IST   |   Update On 2022-04-21 15:14:00 IST
கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு
புதுக்கோட்டை:
 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுப்பட்டி சிதம்பரம் செட்டியார் சந்து வீதியை சேர்ந்தவர் சண்முகநாதன் மனைவி கோமதி (வயது 63).

இவர் தனது வீட்டில் உள்ள கிணற்றில் நீர் இறைக்கும் போது தவறி  கிணற்றுக்குள் விழுந்துள்ளார். சத்தம் கேட்ட அவரது மகன்கள் தீயணைப்புபடையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்புபடையினர் கிணற்றுக்குள் இறங்கி மூதாட்டியை உயிருடன் மீட்டனர்.

மூதாட்டியை மீட்ட தீயணைப்பு படையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Similar News