உள்ளூர் செய்திகள்
ஆம்னி வேனில் கடத்த முயன்ற 20 மூட்டை ரேசன் அரிசி சிக்கியது
கவுந்தபாடி அருகே ஆம்னி வேனில் கடத்த முயன்ற 20 மூட்டை ரேசன் அரிசை பொதுமக்கள் மடக்கி பிடித்து தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கவுந்தப்பாடி:
கவுந்தபாடி அருகே ஆம்னி வேனில் கடத்த முயன்ற 20 மூட்டை ரேசன் அரிசை பொதுமக்கள் மடக்கி பிடித்து தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பூலுவபட்டியில் பாவண்டா கவுண்டனூருக்கு உட்பட்ட முழு நேர ரேசன் கடை செயல்பட்டு வருகிறது.
நேற்று இரவு 8 மணி அளவில் இந்த ரேசன் கடைக்கு எதிரே உள்ள ஒரு வீட்டின் முன் ரோட்டோரத்தில் தலா 50 கிலோ எடை கொண்ட 8 மூட்டை ரேசன் அரிசி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இந்த அரிசி யாருடையது என்று கேட்டுக் கொண்டிருந்தனர். அந்தநேரத்தில் கருப்பு நிற ஆம்னி வேன் ஒன்று வந்து நின்றது.
பின்னர் அந்த வேனில் ரேசன் அரிசி மூட்டைகளை கடத்த முயன்றனர்.
இதைப்பார்த்த பொதுமக்கள் ஆம்னி வேன் அருகே திரண்டு சென்றனர்.
அப்போது கார் டிரைவர் மற்றும் அவருடன் வந்த மற்றொருவர் தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து பொதுமக்கள் காரில் பார்த்தபோது அதில் ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் கவுந்தப்பாடி நில வருவாய் ஆய்வாளர் ரவிக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் விரைந்து வந்து 20 மூட்டை ரேசன் அரிசி மற்றும் ஆம்னி வேனை பறிமுதல் செய்து உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார்.
போலீசார் ஆம்னி வேன் யாருக்கு சொந்தமானது, ரேசன் அரிசி மூட்டைகள் எங்கிருந்து கடத்தி வந்தனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.