உள்ளூர் செய்திகள்
செங்கல்பட்டு பகுதியில் இரவு நேர மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
செங்கல்பட்டு பகுதியில் தடையின்றி மின்வினியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு நீடித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு செங்கல்பட்டு நகரம், திம்மாவரம், ஆத்தூர், பழவேலி, வல்லம் மற்றும் பல்வேறு பகுதிகளில் காலை முதல் இரவு வரை விட்டு, விட்டு மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இரவு நேரமின் தடையால் நோயாளிகள், குழந்தைகள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீட்டில் தூங்க முடியாமல் புழுக்கத்தால் தவித்தனர். பெரும்பாலானோர் வீட்டு மாடிகளில் இரவு நேரத்தை கழித்தனர்.
மின்தடை குறித்து மின் வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் கேட்டபோது சரிவர பதில் தெரிவிக்கவில்லை. அறிவிக்கப்படாத மின்தடை குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், தடையின்றி மின்வினியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு நீடித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு செங்கல்பட்டு நகரம், திம்மாவரம், ஆத்தூர், பழவேலி, வல்லம் மற்றும் பல்வேறு பகுதிகளில் காலை முதல் இரவு வரை விட்டு, விட்டு மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இரவு நேரமின் தடையால் நோயாளிகள், குழந்தைகள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீட்டில் தூங்க முடியாமல் புழுக்கத்தால் தவித்தனர். பெரும்பாலானோர் வீட்டு மாடிகளில் இரவு நேரத்தை கழித்தனர்.
மின்தடை குறித்து மின் வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் கேட்டபோது சரிவர பதில் தெரிவிக்கவில்லை. அறிவிக்கப்படாத மின்தடை குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், தடையின்றி மின்வினியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.