உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

ரூ.10 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது வழக்கு

Published On 2022-04-20 10:39 GMT   |   Update On 2022-04-20 10:39 GMT
ரூ.10 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் சாந்தநாதபுரத்தில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதுக்கோட்டை திருவள்ளுவர் நகர் 2ம் வீதியை சேர்ந்த செல்வராஜ் மகன் அருண்குமார் (வயது 23) ஊழியராக பணியாற்றி வருகிறார். 


அப்போது நிறுவனத்தை சேர்ந்த மதுரையை கந்தசாமி, சதீஷ் தேனியை பால், சிவகங்கையை சங்கர் ஆகியோர் உறுப்பினர்களை சேர்த்து விட்டால் அவர்களுக்கு கடன் பெற்று தருவோம் என்றும், உறுப்பினராக சேர ரூ.1000 மற்றும் இன்சுரன்ஸ் பணம் ரூ.9000 என வசூலித்துள்ளனர். 

ஆனால் கடன் எதுவும் பெற்று தராத காரணத்தினால் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் பணத்தை இழந்தவர்கள் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் மோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News