உள்ளூர் செய்திகள்
சிவரியில் நடராஜர் சப்பரத்தில் திருவீதி உலா
சிவகிரி வேலாயுதசுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா நடராஜருக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா வந்தது.
சிவகிரி:
சிவகிரி வேலாயுதசுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா நடராஜருக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா வந்தது.
சிவகிரி வேலாயுதசுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 16-ந் தேதி சித்ரா பவுர்ணமி அன்று நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் 17-ந் தேதி தேர் நிலை சேர்ந்தது.
தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான நடராஜர் தரிசன நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் செய்யப்பட்டு சிவகிரி ஆதீனம் தலைமையில் கோமாதா பூஜை நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு ஆடவல்லான் நடராஜருக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா வந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு நாட்டுபுற கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு விடையாற்றி உற்ச வத்துடன் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.