உள்ளூர் செய்திகள்
போக்குவரத்து அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
சி.ஐ.டி.யூ. ஆட்டோ சங்கம் சார்பில் போக்குவரத்து துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். ஆட்டோ சம்மேளன தமிழ் மாநில பொதுச் செயலாளர் சிவாஜி கண்டன உரையாற்றினார். ஆட்டோ சங்கபிரதேச கவரவத் தலைவர் முருகன், பொதுச் செயலாளர் மது என்ற லிங்கேசன், நிர்வாகிகள் மதிவாணன், விஜயகுமார், நூர் முகமது, ராமு, செந்தில்குமார், மனோகர், பழனிபாலன் உள்ளிட்ட திரளான ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்.டி.ஒ. கட்டண உயர்வையும் அபராதம் முறையும் வாபஸ் பெற வேண்டும். ஆட்டோ பெர்மிட் உரிமையாளர் இல்லாத வாகனங்களை சரண்டர் எடுத்து கொண்டு தற்போது பயன்படுத்திய ஓட்டுனர் களுக்கு புதிய பர்மிட் வழங்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உடனடியாக நல வாரியத்தை செயல்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.