உள்ளூர் செய்திகள்
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Published On 2022-04-18 16:45 IST   |   Update On 2022-04-18 16:45:00 IST
ஸ்ரீவில்லிபுத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் ஜே.சி.ஐ. ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம் இணைந்து கலை இலக்கிய‌ மூத்தவர்களின் படத்திறப்பு விழா மற்றும் எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நகர்மன்றதலைவர் தங்கம் ரவிக்கண்ணன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

 இந்தநிகழ்வில்  நகர்மன்ற துணைத்தலைவர் செல்வமணி, 32வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சுரேஷ், பட்டய தலைவர் ராஜசேகர், தலைவர் ஆனந்தகுமார், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சிவகுமார்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Similar News