உள்ளூர் செய்திகள்
வேலூர் அருகே ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல்
வேலூர் அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்:
வேலூர் அடுத்த விரிஞ்சி புரம் விமான நிலைய சந்திப்பு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை விரிஞ்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்-பெக்டர்கள் ரவி, சேகரன் போலீஸ்காரர்கள் கோபால், மணி ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேலூர் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 500 கிலோ எடையுள்ள ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் காரில் இருந்த 2 வடமாநில வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெங்களூரி லிருந்து சென்னைக்கு குட்கா பொருட்கள் கடத்தியது தெரியவந்தது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களை கைது செய்தனர். பின்னர் காருடன் குட்காவை பறிமுதல் செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.