உள்ளூர் செய்திகள்
வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கிய காட்சி.

சோளிங்கரில் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு

Published On 2022-04-16 15:33 IST   |   Update On 2022-04-16 15:33:00 IST
சோளிங்கரில் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்பட்டது.
சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தாளிக்கால் கிராமத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஜெய்பீம் விளையாட்டு குழு சார்பில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த பரிசளிப்பு நிகழ்ச்சி உடற்கல்வி ஆசிரியர்கள் தியாகராஜன், தமிழ்வாணன், பாலாஜி ஆகியோர் தலைமை தாங்கினார்கள் தாலிக்கால் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உலகநாதன், மணிவண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு 2 நாள் பகல் நேர வாலிபர் போட்டியில் ராணிப்பேட்டை, வாலாஜா, வேலூர், சென்னை, ஆகிய பகுதிகளில் இருந்து 22 அணி கலந்து கொண்டு போட்டியில் வெற்றிபெற்ற வேலூர் ஸ்பைக்கர்ஸ் முதலிடத்தையும் தாளிக்கால் ஜெய்பீம் அணி இரண்டாம் இடத்தையும் 3-ஆம் இடத்தையும் நான்காம் இடத்தை சென்னை அணியும் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் கோப்பை வழங்கினார். 

அப்போது அரக்கோணம் நகராட்சி கவுன்சிலர் குமார், குணாநிதி, அதிமுக இளைஞர் இளம்பெண் பாசறை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News