உள்ளூர் செய்திகள்
அம்பேத்கர் பெயரில் சமுதாய நலக்கூடம் தொடக்கம்
அபிஷேகப்பாக்கம் சமுதாய நலக்கூடத்தில் அம்பேத்கர் பெயர் பலகையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் திறந்து வைத்தார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் கொம்-யூன் அபிஷேகப்பாக்கம் சமுதாய நல கூடத்தை ரூ.5லட்சம் செலவில் சீரமைக்கும் பணி நடந்தது.
இதையடுத்து தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் சமுதாய நலக்கூடத்தை அம்பேத்கர் பெயரில் தொடங்க நடவடிக்கை எடுத்தார். இதற்கான கோப்புகள் தயாரான நிலையில் பெயர் சூட்டு விழா அபிஷேகப்பாக்கத்தில் நடந்தது.
இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி பெயர் பலகையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர்கள் சரஸ்வதி, ரகுராமன் அலுவலக ஊழியர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.