உள்ளூர் செய்திகள்
மேல்பாடி போலீஸ் நிலையம் அருகில் தீக்குளித்த வாலிபருக்கு தீவிர சிகிச்சை
மேல்பாடி போலீஸ் நிலையம் அருகில் தீக்குளித்த வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த குகையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சரத் (வயது 25). இவர் நேற்று மாலை திடீரென மேல்பாடி போலீஸ் அருகே உடலில் பெட்ரோலை ஊற்றிக் தீ குளித்தார்.
இதனை கண்ட பொது மக்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். பின்னர் 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்-காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்-கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீக்குளித்த சரத் கூறுகையில், போலீசார் எனது வீட்டுக்கு வந்து அவதூராக பேசுகின்றனர்.
நான் நெல் அறுக்கும் எந்திரம் வைத்துள்ளேன். அதை ஓட்டிச்செல்லும் போது நிறுத்துகின்றனர். இதனால் எனக்கு அசிங்கமாக உள்ளது என கூறினார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-
மேல்பாடி போலீஸ் நிலையம் அருகே தீக் குளித்த சரத் என்ற வாலிபர் மது-போதையில் இருந்துள்ளார்.
மேலும் சரத் மற்றும் அவரது தம்பி சஞ்சய் ஆகிய இருவர் கடந்த 2019-ம் ஆண்டு 17 வயது பள்ளி மாணவியை கடத்தியுள்ளனர். இது தொடர்பாக இருவர் மீதும் கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மேலும் இவர்கள் மீது மணல் கடத்தல் போன்ற வழக்குகளும் உள்ளது. போக்சோ வழக்கில் இருவரும் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளனர்.
இதனால் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சரத்தின் வீட்டுக்கு சென்று கோர்ட்டில் ஆஜராகும் படி கூறினார். இதை திசை திருப்பவே மதுபோதையில் வந்து தீ குறித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.