உள்ளூர் செய்திகள்
குடியாத்தத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

குடியாத்தத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-12 15:36 IST   |   Update On 2022-04-12 15:36:00 IST
குடியாத்தத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்:

வேலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்கம் சிஐடியு, குடியாத்தம் மாட்டுவண்டி தொழிலாளர் சங்க கிளை ஆகியவை இணைந்து குடியாத்தம் தாலுகா ஒலக்காசி ஊராட்சி பகுதியில் மணல் குவாரி தமிழக அரசு சார்பில் தொடங்கிட கேட்டு ஆர்ப்பாட்டம் நேற்று குடியாத்தம் நீர்வள ஆதார துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாட்டுவண்டி தொழிலாளர் சங்க தலைவர் எஸ்.பங்குமூர்த்தி தலைமை தாங்கினார், மாட்டு வண்டி தொழிலாளர் சங்க செயலாளர் டி.விஜயன், மாட்டுவண்டி தொழிலாளர் சங்க பொருளாளர் எம்.அசோகன், நிர்வாகிகள் சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

வேலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்க செயலாளர் ஏ.குப்பு போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன் போராட்டத்தை முடித்து வைத்தார். 

இந்த போராட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பி.காத்தவராயன், மாவட்ட துணை செயலாளர் சி.சரவணன், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.சாமிநாதன், மரம் ஏறும் தொழிலாளர் சங்க தலைவர் பி.குணசேகரன், பீடி சங்க பொருளாளர் எஸ்.சிலம்பரசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ள மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு குடியாத்தம் ஒலக்காசி ஊராட்சி சித்தாத்தூர் பகுதியில் அரசு மணல் குவாரி தெடங்கிட வேண்டும்.

குடியாத்தம் பகுதியில் மணல் குவாரி தொடங்கினால் ஆயிரத்-திற்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்வு மேம்படவும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய சாதாரண மக்கள் குறைந்த விலையில் மணல் பெறலாம்.

கட்டுமான தொழிலாளர்-கள், மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்வு மேம்பட குவாரி தொடங்கிட கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Similar News