உள்ளூர் செய்திகள்
வேலூர் வனப்பகுதியில் வனவிலங்குகள் தாகம் தீர்க்க 7 இடங்களில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
வேலூர் வனப்பகுதியில் வனவிலங்குகள் தாகம் தீர்க்க 7 இடங்களில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வேலூர்:
வேலு£ர் வனசரகத்துக்கு உட்பட்டு அணைக்கட்டு, லத்தேரி, சோழவரம், டெல், சேனூர், பனமடங்கி உட்பட பல பகுதிகள் உள்ளது. இந்த காட்டுப்பகுதிகளில் மான்கள், நரி, காட்டுப்பன்றிகள், பாம்பு, முயல், காட்டெருமை உட்பட பலவகையான விலங்குகள், பறவை வகைகள் உள்ளது. அங்குள்ள உணவுகள் மற்றும் நீரோடைகள், மற்றும் குட்டைகளில் உள்ள நீரை பருகி தாகம் தீர்த்து வருகின்றன.
கோடை காலங்களில் காடுகளில் உள்ள நீரோடைகள், குட்டைகளில் நீர் வற்றினால், தாகம் தீர்க்க வனவிலங்குகள் தண்ணீர் உள்ள இடங்களுக்கு நகர்கின்றது. சில சமயங்களில் மனிதர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் நுழைந்து விடுகிறது.
அந்த வகையில் வேலூர் வனசரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறையினர் சார்பில் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் வராமல் இருக்கவும், அவைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய செயற்கை குட்டைகள் அமைத்து டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்தாண்டும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறைக்கு சொந்தமான காட்பாடி, சோழவரம் உட்பட 7 இடங்களில் செயற்கை குட்டைகள் அமைக்கப் பட்டுள்ளது.
3 நாட்களுக்கு ஒருமுறை டிராக்டர் மூலம் 5ஆயிரம் லிட்டர் தண்ணீர் இந்த தொட்டிகளில் வனத்துறை சார்பில் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் யானைகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வராமல் இருக்க Ôயானை நீர்பள்ளம்Õ வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்: ஆந்திராவில் இருந்து காட்டு வழியாக யானைகள் கூட்டமாகவோ, ஒற்றை-யானையாக அவ்வப்போது குடியாத்தம், காட்பாடி சுற்றுவட்டாரத்தில், காடுகளுக்கு அருகே உள்ள குடியிருப்பு விவசாய நிலத்தை நோக்கி உணவு தேடி வந்து விடுகிறது.
அந்த வகையில் கோடையில் வெயில் காரணமாக தண்ணீர் தேடி யானைகள் வராமல் இருக்க, அவைகள் வந்து செல்லும் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் (பனமடங்கி காப்புகாடு) 10 மீட்டர் அகலம், 2 மீட்டர் ஆழத்தில் 10ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட Ôயானை நீர் பள்ளம்Õ அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், குடியாத்தம் பரதராமி பகுதியிலும் யானை நீர் பள்ளம் உள்ளது. இதில், தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளது.
இதன் மூலம் தண்ணீர்தேடி கோடைக்காலத்தில் யானைகள் காடுகளை விட்டு, குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதை தவிர்க்க முடியும். மற்ற வன உயிரினங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்யவும் வனத்துறை சார்பில் செயற்கை குட்டைகள் அமைத்து அதில் தண்ணீர் நிரப்பி பராமரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.