உள்ளூர் செய்திகள்
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்- புதுவையில் ஓட்டுப்பதிவு
புதுவை கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணை தூதகரம், பிரெஞ்சு பள்ளி என 2 ஓட்டுப்பதிவு மையங்களும், காரைக்காலில் ஒரு ஓட்டுப்பதிவு மையமும் அமைக்கப்பட்டிருந்தது.
புதுச்சேரி:
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தேர்தல் இன்று நடந்தது.
தேர்தலில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றவர்கள். ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்க புதுவை மாநிலத்தில் 4 பிராந்தியங்களில் வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களுக்கு பிரெஞ்சு தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.
புதுவை கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணை தூதகரம், பிரெஞ்சு பள்ளி என 2 ஓட்டுப்பதிவு மையங்களும், காரைக்காலில் ஒரு ஓட்டுப்பதிவு மையமும் அமைக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை 8 மணிக்கு ஓட்டு பதிவு தொடங்கியது. இரவு 7 மணி வரை ஓட்டளிக்கலாம். பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் அடையாள அட்டையுடன் வந்து வாக்களித்தனர்.
வாக்குபதிவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.