உள்ளூர் செய்திகள்
லிசேபிரான்சே பள்ளியில் பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் வாக்குபதிவில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்தனர்

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்- புதுவையில் ஓட்டுப்பதிவு

Published On 2022-04-10 06:12 GMT   |   Update On 2022-04-10 06:12 GMT
புதுவை கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணை தூதகரம், பிரெஞ்சு பள்ளி என 2 ஓட்டுப்பதிவு மையங்களும், காரைக்காலில் ஒரு ஓட்டுப்பதிவு மையமும் அமைக்கப்பட்டிருந்தது.

புதுச்சேரி:

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தேர்தல் இன்று நடந்தது.

தேர்தலில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றவர்கள். ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்க புதுவை மாநிலத்தில் 4 பிராந்தியங்களில் வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களுக்கு பிரெஞ்சு தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

புதுவை கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணை தூதகரம், பிரெஞ்சு பள்ளி என 2 ஓட்டுப்பதிவு மையங்களும், காரைக்காலில் ஒரு ஓட்டுப்பதிவு மையமும் அமைக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை 8 மணிக்கு ஓட்டு பதிவு தொடங்கியது. இரவு 7 மணி வரை ஓட்டளிக்கலாம். பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் அடையாள அட்டையுடன் வந்து வாக்களித்தனர்.

வாக்குபதிவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News