உள்ளூர் செய்திகள்
கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிலாளி குத்திக்கொலை வாலிபர் கைது

Published On 2022-04-08 06:25 GMT   |   Update On 2022-04-08 06:25 GMT
முன்விரோதத்தில் தொழிலாளியை வாலிபர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 46). தேங்காய் வெட்டும் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

இதனால் வடிவேலுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் அவருடன் அவரது மனைவி பேசாமல் இருந்து வந்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அண்ணாநகர் காதி போர்டு காலனியை சேர்ந்த தொழிலாளி செந்தில்குமார் (36). இவருக்கும், வடிவேலுவுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. அது தொடர்பாக கடந்த 2ந்தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது செந்தில்வேல் கத்தியால் வடிவேலை குத்தியுள்ளார். பின்பு கத்திக்குத்து காயத்துடன் வடிவேல் வீட்டிற்கு வந்து இருக்கிறார்.

வயிற்றில் ரத்தக்காயம் இருந்ததை பார்த்து அவரது மகள் சரவண தேவி கேட்டுள்ளார்.

அப்போது செந்தில்குமார் கத்தியால் குத்திவிட்ட தகவலை மகளிடம் வடிவேல் தெரிவித்திருக்கிறார். செந்தில்குமார் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் அவருக்கு பயந்து, அவர் கத்தியால் குத்தியது பற்றி போலீசில் கூறாமல் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வடிவேலுவை சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்தில் வடிவேலுவின் மகள் சரவணன் தேவி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். வடிவேலை குத்திக் கொன்ற செந்தில்குமாரை கைது செய்தனர். முன்விரோதத்தில் தொழிலாளியை வாலிபர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News