உள்ளூர் செய்திகள்
நீட் தேர்வு

நீட் தேர்வு எழுத கூடுதலாக 20 நிமிடங்கள்- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

Published On 2022-04-08 03:48 GMT   |   Update On 2022-04-08 06:28 GMT
கடந்த ஆண்டு 3 மணி நேரம் மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு நீட் தேர்வு வருகிற ஜூலை 17-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு நடந்தது வருகிறது.

தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் (neet.nta.nic.in) சென்று மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும். நாடு முழுவதும் தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

மாணவர் கள் ஆன்லைனில் பதிவு செய்யும்போது மொழியையும் தேர்வு செய்ய வேண்டும். நீட் தேர்வுகள் ஓ.எம்.ஆர். தாள்கள் மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நீட்தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும் என்று தேர்வு எழுதுவதற்கான நேரம் 200 நிமிடங்களாக (3 மணிநேரம் 20 நிமிடங்கள்) அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 3 மணி நேரம் மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags:    

Similar News