உள்ளூர் செய்திகள்
விழிப்புணர்வு பேரணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

உலக சுகாதார தினம் கொண்டாட்டம்

Published On 2022-04-07 11:52 IST   |   Update On 2022-04-07 11:52:00 IST
தவளக்குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டது. இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்துகொண்டார்.
புதுச்சேரி:

மணவெளி தொகுதிக்குட்பட்ட தவளக் குப்பம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகரு மான ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் டாக்டர் முரளி, டாக்டர் ரகுநாத் ஆகியோர் முன் னிலை வகித்தனர். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கனிமொழி  வரவேற்றார்.

நிகழ்ச்சியையொட்டி புவியை காப்போம் என்ற தலைப்பில் மாணவ- மாணவி களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். மேலும் புவி வெப்பமயம்   ஆவதை தடுக்கும் நோக்கில் இலவச மரக்கன்றுகளையும் அவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில்  பள்ளி நிர்வாகிகள்,  ஆசிரியர்கள், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள்,   ஆஷா பணியாளர்கள் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர் கள் ராமு, கிருஷ்ணமூர்த்தி, ராஜா, நாகமுத்து, விமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News