உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

போக்சோவில் வாலிபர் கைது

Published On 2022-04-05 13:33 IST   |   Update On 2022-04-05 13:33:00 IST
சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அழைத்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்
அரியலூர்:

கடலூர் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது29) இவர் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள ஒரு ஜவுளிகடையில் வேலைபார்த்து வருகிறார்.

அதே கடையில் 16 வயது சிறுமியும் வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் தமிழ்செல்வன் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி, அந்த சிறுமியை அழைத்துச் சென்று பண்ருட்டி பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக அவா¢ கிராமத்திற்கு செல்ல பஸ் இல்லாமல் நின்று கொண்டு உள்ளார்.

அந்தப் பகுதியில் வந்த சிலர் நீண்ட நேரமாக நிற்பதை கண்டு சந்தேகம் ஏற்பட்டு அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். பிறகு தமிழ்ச்செல்வனை  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது  செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News