உள்ளூர் செய்திகள்
முதன்மை மாநகராட்சியாக மாற்ற உதவ வேண்டும்
ராஜபாளையத்தை முதன்மை நகராட்சியாக மாற்ற மக்கள் பிரதிநிதிகள் உதவ வேண்டும் என்று ராம்கோ சேர்மன் வலியறுத்தினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொழில் வர்த்தகசங்க கூட்ட அரங்கத்தில் ராஜபாளையம் தொழில்வர்த்தக சங்கம் மற்றும் ராஜபாளையம் பருத்தி, பஞ்சு மார்க்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
ராஜபாளையம் தொழில் வர்த்தகசங்க தலைவரும், ராம்கோ குரூப் சேர்மனுமான ஆர்.வெங்கட்ராம ராஜா தலைமை வகித்தார். பருத்தி பஞ்சு மார்க்கெட் சங்க தலைவர் கஜபதிராஜா முன்னிலை வகித்தார். ராஜ பாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப் பாண்டியன், நகர்மன்றத் தலைவர் பவித்ரா ஷியாம்ராஜா, துணை தலைவர் கல்பனா குழந்தை வேல், ஷியாம்ராஜா உள்ளிட்ட அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் பாராட்டி கவுரவிக்கப்பட்ட னர்.
விழாவில் ராம்கோ குரூப்சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா பேசுகையில், மாநிலத்தின் முதன்மை நகராட்சியாக ராஜபாளையம் நகராட்சியை மாற்ற எம்.எல்.ஏ., நகர்மன்ற சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைவரும் பணி மேற்கொள்ள வேண்டும். அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன் என்றார்.
தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், ராம்கோகுரூப் சேர்மனால் அனைவரும் பாராட்டுபெற்று அவரது கையால் பரிசு வாங்குவது மிகப்பெரிய கவுரவம் ஆகும். இதனை மிகப்பெரிய ஊக்கமாக எடுத்துக்கொண்டு நகராட்சி சேர்மன், துணை சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள் தங்களுக்கு கிடைத்திருப்பது பதவி என்று கருதாமல் பொறுப்பு என உணர்ந்து செயல்பட்டு பொது மக்களிடம் நற்பெயர்களும் பாராட்டுக்களும் வாங்க வேண்டும்.
வரும் சட்டமன்ற தொடரில் ராஜபாளையம், மண்ணின் மைந்தர் முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் திருவுருவ படத்தை சட்டமன்ற வளாகத்தில் திறக்க வலியுறுத்த உள்ளேன் என்றார்.
இந்த நிகழ்வில் தி.மு.க. நகர பொறுப்பாளர் (வடக்கு) மணிகண்டராஜா, சங்க நிர்வாகிகள், வியாபார பெருமக்கள் உட்படபலர் கலந்து கொண்டனர்.