உள்ளூர் செய்திகள்
பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து போராட்டம்
ராஜபாளையத்தில் பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம் நடந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம் நடந்தது.
கியாஸ் சிலிண்டரை பிணம் போல பாடைகட்டி தூக்கியும், ஆட்டோவை கயிறுகட்டி இழுத்தும், ஒப்பாரி வைத்து, சங்குஊதி, நூதன போராட்டம் நடத்தினர்.
நகர செயலாளர் மாரியப்பன் தலைமையில் மாவட்டகுழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாற்றுத்திறனாளிகள் தலைவர் சரவணன், ஜனநாயக மாதர்சங்க தலைவி லீலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.