உள்ளூர் செய்திகள்
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வணிக திட்டம் தயாரித்தல் குறித்த கருத்தரங்கு நடந்தது.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் ணிஞிமிமி-பிஹிஙி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து “வணிக திட்டம் தயாரித்தல்” குறித்த கருத் தரங்கை நடத்தியது. முதல்வர் கிருஷ்ணமுர்த்தி தலைமை தாங்கினார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேலாண்மை துறை உதவி பேராசிரியர் கே.என்.மாரிமுத்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அவர் பேசுகையில், வணிக திட்டம் ஒரு வணிக யோசனையின்படி செல்லுபடியாகும். எதிர்காலத்துக்கான சாலை வரைபடத்தை வலுவாகவும், தெளிவாகவும் உருவாக்க முடியும். வணிக நிதியியல் மற்றும் சந்தையில் உள்ள போட்டியை பற்றிய அதிக புரிதலை அளிக்க முடியும் என்றார்.
மேலும் அவர், வணிக திட்டத்தை தயாரிப்பதற்கான வழிமுறைகளையும் விளக்கியதுடன், மாணவர்களின் சொந்த வணிக திட்டத்தை தயாரிப்பதற்கு பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தினார். மாணவி தனவர்ஷினி வரவேற்றார். மாணவி ஆர்த்தி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். மாணவி காயத்ரி நன்றி கூறினார்.
இந்த கருத்தரங்கில் பல்வேறு துறைகளை சேர்ந்த 92 மாணவர்கள் கலந்து கொண்டனர். தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர் அஜித்குமார் ஏற்பாடு செய்தார்.
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கில துறை ஆய்வு மன்றமான “மினர்வா” சார்பில் “பாப்சி சித்வாவின் புதினம் வாட்டர்&ல் பெண்மை மற்றும் அடிபணிதல் பற்றிய கருத்துக்கள்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. ஆங்கில துறை தலைவர் பெமினா தலைமை தாங்கினார்.
முனைவர் பரிதா பேகம் தலைப்பு கண்ணோட்டம் வழங்கினார். உதவி பேராசிரியை அழகம்மாள், “பாப்சி சித்வாவின் புதினம் வாட்டர்” புதினத்தில் சுதந் திர இந்தியாவின் முந்தைய கால பெண்களின் அடிமைப் படுத்துதல் என்ற தலைப்பில் பேசினார்.
முன்னதாக முனைவர் நாகஜோதி வரவேற்றார். உதவி பேராசிரியை கொண்டம்மாள் நன்றி கூறினார்.