உள்ளூர் செய்திகள்
கடத்தல்

திட்டக்குடி அருகே 11-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர்

Published On 2022-04-02 11:00 GMT   |   Update On 2022-04-02 11:00 GMT
திட்டக்குடி அருகே 11-ம் வகுப்பு மாணவியை வாலிபர் கடத்தியதாக தாய் அளித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டக்குடி:

திட்டக்குடி அருகே கூடலூர் சாமிநாதன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். அவரது மகள் கிருத்திகா(வயது 16). இவர் பெண்ணாடம் இறையூர் அருணா மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற கிருத்திகா இது வரை வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கிருத்திகாவை உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுபற்றி அக்கம் பக்கம் விசாரிக்கவே கிருத்திகாவை பெண்ணாடம் சோழன் நகரை சேர்ந்த காசி விசுவநாதன் மகன் அரவிந்த் என்பவர் அழைத்து சென்றதாக கூறினர்.

இதுகுறித்து கிருத்திகாவின் தாய் மஞ்சுளா ஆவினங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கிருத்திகாவை கடத்தி சென்ற அரவிந்தை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News