உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கடலூர் மாவட்டத்தில் 2.80 கோடி பெண்கள் கட்டணமில்லாமல் பஸ்களில் பயணம்- கலெக்டர் தகவல்

Published On 2022-03-30 16:33 IST   |   Update On 2022-03-30 16:33:00 IST
கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் இதுநாள் வரை 2 கோடியே 80 லட்சத்து 85 ஆயிரத்து 841 எண்ணிக்கையிலான மகளிர்கள் கட்டணமில்லாமல் பஸ் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் பெண்கள் அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பஸ்களில், பணிபுரியும் மகளிர், கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பஸ் பயண அட்டை இல்லாமலும் பயணிக்க ஆணை பிறப்பித்தார்.

கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் இதுநாள் வரை 2 கோடியே 80 லட்சத்து 85 ஆயிரத்து 841 எண்ணிக்கையிலான மகளிர்கள் கட்டணமில்லாமல் பஸ் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.

மேலும் 2,04,099 எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகளும், 8131 எண்ணிக்கையிலான மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்களும் அரசு பஸ்களில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளார்கள். மேலும் 19,987 எண்ணிக்கையிலான திருநங்கைகள் அரசு பஸ்களில் இலவசமாக பயணச்சலுகை பெற்று பயனடைந்துள்ளனர்.

ஆகையால் இந்த சிறப்பு வாய்ந்த திட்டத்தினை பெண்கள் தொடர்ந்து பயன்படுத்தி பயன் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Similar News