உள்ளூர் செய்திகள்
வேதாரண்யம் அருகே ஔவையார் கோவிலில் நடந்த ஆண்டு விழாவில் மும்மதத்தினர் பங்கேற்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா துளசியபட்டினம் கிராமத்தில் விஸ்வநாதர் ஔவையார் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஔவைக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த ஔவையார் கோவிலின் 48-வது ஆண்டு திருவிழா தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். பின்பு ஔவையார் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு ஔவையார் வேடமிட்டு ஔவையார் பாடல் பாடப்பட்டு பட்டிமன்றம் நடைபெற்றது.
விழாவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக விளங்கியது
விழாவில் நாகை மாலி எம்.எல்.ஏ, அறநிலையத்துறை உதவி ஆணையர் இணை ஆணையர் தென்னரசு, செயல் அலுவலர் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் முருகையன், வழக்கறிஞர்கள் சீனிவாசன், அன்பரசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வைத்தியநாதன் கோமதி தனபாலன், ஊராட்சிமன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா துளசியபட்டினம் கிராமத்தில் விஸ்வநாதர் ஔவையார் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஔவைக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த ஔவையார் கோவிலின் 48-வது ஆண்டு திருவிழா தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக நடைபெற்றது.
விழாவிற்கு நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்து பேசியதாவது:-
அரசு சார்பில் நடத்தப் படும் இந்த விழாவை வருங்காலத்தில் மிகச் சிறப்பாக நடத்தவும், விஸ்வநாதர் ஔவை கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தவும் உடன் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் ஒத்துழைப்போடு வருங்காலத்தில் அவ்வாறு விழா சிறப்பாக நடத்தப்படும் என்றார்.
விழாவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக விளங்கியது
விழாவில் நாகை மாலி எம்.எல்.ஏ, அறநிலையத்துறை உதவி ஆணையர் இணை ஆணையர் தென்னரசு, செயல் அலுவலர் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் முருகையன், வழக்கறிஞர்கள் சீனிவாசன், அன்பரசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வைத்தியநாதன் கோமதி தனபாலன், ஊராட்சிமன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.