உள்ளூர் செய்திகள்
மாயம்

சிதம்பரத்தில் திருமணமான 11 மாதத்தில் புதுப்பெண் மாயம்

Published On 2022-03-29 15:56 IST   |   Update On 2022-03-29 15:56:00 IST
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே திருமணமான 11 மாதத்தில் புதுப்பெண் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:

சிதம்பரம் அருகே முள்ளோடை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சத்யா (வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 11 மாதங்களே ஆகிறது.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த சத்யா வெளியில் சென்றார். வெளியில் சென்ற இவர் வீடு திரும்பவில்லை. சத்யா வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த கணவர் மணிகண்டன் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடு என பல்வேறு இடத்தில் தேடினார். எங்கு தேடியும் சத்யா எங்கு போனார் என்று தெரியவில்லை.

இதுகுறித்து கணவர் மணிகண்டன் கிள்ளை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சத்தியா எங்கு சென்றார்?  கடத்தப்பட்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News