உள்ளூர் செய்திகள்
காரைக்காலில் இருந்து சட்டவிரோதமாக விற்பனைக்காக கொண்டு வந்த 200 நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு இரவு நேரங்களில் சட்டவிரோதமாக வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலங்களுக்கு நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாக தொடர்ந்து வந்த ரகசிய புகார்கள் வந்த நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் தலைமையில் திருப்பூண்டி நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் காரைக்காலில் இருந்து சட்டவிரோதமாக கொள்முதல் நிலையம் மூலம் விற்பனை செய்வதற்காக உரிய ஆவணங்களின்றி நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்து தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து 200 நெல் மூட்டைகள் மற்றும் அதனை ஏற்றி வந்த வேன் கீழையூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதில் தொடர்புடைய காரைக்கால் மாவட்டம் திருவேட்டக்குடியைச் சேர்ந்த கருணாநிதி என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல பொது மேலாளர் ராஜ்குமார் தெரிவித்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு இரவு நேரங்களில் சட்டவிரோதமாக வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலங்களுக்கு நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாக தொடர்ந்து வந்த ரகசிய புகார்கள் வந்த நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் தலைமையில் திருப்பூண்டி நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் காரைக்காலில் இருந்து சட்டவிரோதமாக கொள்முதல் நிலையம் மூலம் விற்பனை செய்வதற்காக உரிய ஆவணங்களின்றி நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்து தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து 200 நெல் மூட்டைகள் மற்றும் அதனை ஏற்றி வந்த வேன் கீழையூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதில் தொடர்புடைய காரைக்கால் மாவட்டம் திருவேட்டக்குடியைச் சேர்ந்த கருணாநிதி என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல பொது மேலாளர் ராஜ்குமார் தெரிவித்தார்.