உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

கீழ்வேளூர் பேரூராட்சி துணைத்தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது

Published On 2022-03-27 11:04 IST   |   Update On 2022-03-27 11:04:00 IST
நாகை மாவட்டம், கீழ்வேளூர் பேரூராட்சி துணைத்தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தி.மு.க சார்பில் சந்திரசேகரன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

அதேபோல் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு ம.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற காந்திமதி ஸ்ரீதரனும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து நடைபெற்ற மறைமுக வாக்குப்பதிவில் மொத்தம் 15 உறுப்பினர்களில் 12 உறுப்பினர்கள் தி.மு.க உறுப்பினர் சந்திசேகரனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 

இதனையடுத்து சந்திரசேகரன் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மோகன சுந்தரம் அறிவித்தார். கூட்டணி கட்சியினர் போட்டி வேட்பாளர் நிறுத்தியதால் பேரூராட்சி அலுவலகத்திற்கு வெளியே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News