உள்ளூர் செய்திகள்
அறிவியல் கண்காட்சி.

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Published On 2022-03-27 05:04 GMT   |   Update On 2022-03-27 05:04 GMT
திருமருகல் அருகே அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
நாகப்பட்டினம்:

திருமருகல் ஒன்றியம், கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி அளவிலான மாணவ- மாணவிகளுக்கு அறிவியல் கண்காட்சி போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். 

இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். 

இந்த போட்டி 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 10-ம் வகுப்பு ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு ஒரு பிரிவாகவும் நடைபெற்றது. இதில் 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

பரிசு பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சி போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தமிமுன் அன்சாரி, ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News