உள்ளூர் செய்திகள்
மாணவன் பலி

டிராக்டர் டிப்பர் டயர் ஏரியதில் மாணவன் பலி

Published On 2022-03-25 12:29 GMT   |   Update On 2022-03-25 12:29 GMT
ரிஷிவந்தியம் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் டிப்பர் டயர் ஏரியதில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரிஷிவந்தியம்:

ரிஷிவந்தியம் அடுத்த காட்டு எடையார் எல்லையில் செங்கணாங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த கோபி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நடைபெறும் வேலைக்காக செங்கணாங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த செந்தில்முருகன் மகன் கௌதம் வயது 17, என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் தனசேகரன் ஓட்டிவந்த டிராக்டரில் அமர்ந்து வந்தபோது நிலை தடுமாறி விழுந்ததில் டிராக்டர் டிப்பர் கௌதம் வயிற்றுப்பகுதியில் ஏறியது, படுகாயமடைந்த கௌதமை திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இந்த விபத்து குறித்து செந்தில்முருகன் கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள். விபத்தில் பலியான கௌதம் அரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது, டிராக்டர் டிப்பர் டயர் ஏரி பள்ளி மாணவன் இறந்தது அப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News