உள்ளூர் செய்திகள்
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம்-தேர்த்திருவிழா
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம்-தேர்த்திருவிழா நடை பெற உள்ளது. இதனையடுத்து 29-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், 30-ந் தேதி காலை 11 மணிக்கு கொடியேற்றும் நடைபெற உள்ளது.
அந்தியூர்:
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம்-தேர்த்திருவிழா நடை பெற உள்ளது. இதனையடுத்து 29-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், 30&ந் தேதி காலை 11 மணிக்கு கொடியேற்றும் நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற பழமை யான பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 17-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனையடுத்து நேற்று மகிஷாசுர வர்தனம் எனும் எருமைக்கிடாய் வெட்டும் நிகழ்வு நடைபெற்றது.
இதனையடுத்து 29-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், 30-ந் தேதி காலை 11 மணிக்கு கொடியேற்றும் நடைபெற உள்ளது.
அன்றைய தினத்திலிருந்து அம்மன் பூத வாகனம், நரி வாகனம், சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், யானை வாகனம், சட்டத் தேர் புஷ்ப பல்லாக்கு வாகனங்களில் தினந்தோறும் சாமி வீதி உலா அந்தியூர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
இதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் 6&ந் தேதி காலை குண்டம் திருவிழா நடைபெற உள்ளது.
இதில் அந்தியூர், சங்கராபாளையம், புதுப்பாளையம், தவிட்டுப்பாளையம், சின்னத்தம்பி பாளையம், எண்ணமங்கலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து குண்டம் இறங்குவார்கள்.
அதனைத்தொடர்ந்து 8-ந் தேதி மாலை தேர் திருவிழா தொடங்கி 11-ந் தேதி வரை அம்மன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து தேர் நிலையை வந்து அடையும்.
தொடர்ந்து 12-ந் தேதி பரிவேட்டை வெகு விமர்சையாக நடைபெறும். 13-ந் தேதி வசந்தோற்சவம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறும்.