உள்ளூர் செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பெண்கள் மாயமாகினர்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள பிரண்டைகுளத்தை சேர்ந்தவர் முத்து இருளன். இவரது மகள் கலைச்செல்வி (வயது 22). பட்டதாரியான இவர் கோவையில் உள்ள ஒருதனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சில நாட்களுக்குமுன்பு ஊர் திரும்பினார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த கலைச்செல்வி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி துரைச்சாமிபுரம் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் காளீஸ்வரி(18). சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி செய்தவர் மகேஸ்வரி (51). இவர் சம்பவத்தன்று வங்கிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரியை தேடி வருகின்றனர்.