உள்ளூர் செய்திகள்
கதண்டுகள் கடித்து 7 பேர் படுகாயம்
ஜெயங்கொண்டத்தில் கதண்டுகள் கடித்து 2 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
ரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த ஆண்டிமடம் அருகே உள்ள கூவத்தூர் மடத்துத்தெருவில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.
அப்போது அங்கு இருந்த ஒரு கருவேல மரத்தை அப்புறப்படுத்திய போது அதிலிருந்த கதண்டு கூடுகள் கலைந்து அங்கு மரம் வெட்டிக் கொண்டிருந்த கூவத்தூர் மடத்துத்தெருவைச் சேர்ந்த பாலு, விழப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், டி.மங்கலத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்திகேயன், முருகேசன், ரவிச்சந்திரன் மற்றும்
அங்கு நூறு நாள் வேலையில் ஈடுபட்டிருந்த அமலோற்பவமேரி வயது 70 மற்றும் அவரது மகள் அடைக்கலமேரி 54 ஆகிய 7 பேரையும் கதண்டுகள் துரத்தி துரத்தி கடித்தது.
இதில் காயமடைந்த 2 பெண்கள் உட்பட 7 பேரையும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 2பேர் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 5 பேரும் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
கூவத்தூர் பகுதியில் கதண்டுகள் துரத்தி, துரத்தி கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.