உள்ளூர் செய்திகள்
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
பரமக்குடி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பரமக்குடி
பரமக்குடி தாலுகா குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரசாமி. இவரது மகன் தாமரைக்கண்ணன் (வயது 22) இவர் அந்தப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி வழக்குப் பதிவு செய்து தாமரைக்கண்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.