உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சிறுமியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் போக்சோவில் கைது

Published On 2022-03-16 12:38 IST   |   Update On 2022-03-16 12:38:00 IST
வேதாரண்யம் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பெயிண்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலம் நான்காம்சேத்தி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு மகன் உத்திராபதி (வயது25). பெயிண்டர். இவர் பஞ்சநதிக்குளம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து 
திருமணம் செய்து கொண்டாராம்.

இந்நிலையில உத்திராபதியின் பெற்றோர் இந்த திருமணத்தை 
ஆதரித்து இருவரையும் வீட்டுடன் வைத்து கொண்டார்களாம். 
இந்நிலையில் 17 வயது சிறுமி 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். 
அவரது உடல் நலம் சரியில்லாததால் திருவாரூர் அரசு 
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து அங்கு
சிகிச்சை பெற்று வருகிறார்.

இளம்வயது பெண் கர்ப்பம் ஆனது குறித்து சிறுமியை பரிசோதித்த
டாக்டர் வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மலர்கொடி வழக்குப்பதிவு செய்து 
பெயிண்டர் உத்திராபதியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Similar News