உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் மாரடைப்பால் முதியவர் சாவு

Published On 2022-03-15 15:28 IST   |   Update On 2022-03-15 15:28:00 IST
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் மாரடைப்பால் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
அரக்கோணம்:

சென்னை சென்டரல் ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெங்களுருவை சேர்ந்த பாபு (வயது
60). என்பவர் அவரது மனைவியுடன் பயணம் செய்தார். 

ரெயில் அரக்கோணம் அருகே வந்த போது திடிரென பாபுவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரும் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இறங்கினர். 

நடைமேடையில் அவரது மனைவி மற்றும் பொதுமக்கள் சிலரும் முதலுதவி அளித்தனர். 

இதற்கிடையே அங்கிருந் தவர்கள் உதவியுடன் பாபுவை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பாபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது குறித்து  அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Similar News