உள்ளூர் செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
அரக்கோணம்:
அரக்கோணம் கணேஷ் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). கூலி வேலை செய்து வந்தார்.
இவர் நண்பர்களுடன் கும்பினிபேட்டை அருகே மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் மது போதையில் அவர்கள் வந்த பைக் சாவியை இருட்டில் தேடியுள்ளனர்.
சாவி கிடைக்காததால் நண்பர்கள் சென்ற போது ரமேஷ் அங்கு இல்லை இதனால் வீட்டிற்கு சென்று விட்டதாக நினைத்துக்கொண்டு சென்றனர்.
மீண்டும் நேற்று காலை பைக் சாவியை தேடி மது அருந்திய இடத்திற்கு வந்தனர்.
அப்போது அங்குள்ள கிணற்றின் அருகே ரமேஷின் செருப்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கிணற்றில் இருந்து ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.